முகப்பு » இலக்கியம் » இலக்கிய இனிமை

இலக்கிய இனிமை

விலைரூ.70

ஆசிரியர் : சு.சுப்பிரமணியன்

வெளியீடு: மணி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
மணி பதிப்பகம், 166, முதலாம் குறுக்குத் தெரு, 6வது மெயின் ரோடு, தணிகாசலம் நகர், பி.பிளாக், சென்னை- 110 (பக்கம்: 184)

இனிப்பு பண்டம் அதிகம் உண்டால், சில துன்பம் வரலாம். சர்க்கரை நோய் ஏற்படலாம். அதனால்தான் "அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்றனர் பெரியோர். ஆனால், இலக்கியம் என்ற இனிப்பை எவ்வளவு படித்தாலும், கேட்டாலும், இனிமையே ஏற்படும். இந்நூலைப் படித்தால் அந்த உணர்வு அடையலாம். நூலாசிரியர் பல ஆண்டுகளுக்கு முன் அவ்வவப்போது எழுதி, பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைகள் ஆய்ந்துள்ளதும், ஆசிய ஜோதிநேருவை, எழுத்தாளர் நேருவாகப் படம் பிடித்து காட்டுவதும், சிலப்பதிகாரச் சிறப்பை மூன்று கட்டுரைகளில் முத்தாகத் தருவதும், "ஊழ் அதிகாரத்தால் திருவள்ளுவரின் திறனை விளக்குவதும், தேசியக் கவி பாரதியை தெய்வீகத் தீங்கவிஞராக, தம் எழுத்தால் மாற்றிக் காட்டுவதும், சுஜாதாவின் புதிய திருக்

குறள் உரையில் மேன்மையைத் தொட்டுக் காட்டுவதும், நூல் மதிப்புரைக்கு எடுத்துக்காட்டாக கிரண்பேடி எழுதிய நூலின் தமிழாக்கத்தை மதிப்பீடு செய்துள்ளதும் நூலாசியரின் தமிழ்ப் புலமையையும், எழுத்தாற்றலையும் நன்கு உணர வைக்கும் வகையில் உள்ளன.

இவர் கட்டுரைகளுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சிலம்புச் செல்வர் ம.பொ.சி., பாராட்டுத் தெரிவித்துள்ளது சாலவும் பொருந்தும் என்பதற்கு இந்நூலே தக்கசான்றாகும். அவருமையான இந்நூலை அனைவரும் படித்து இன்பமடையலாம்.ஆகும். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us