25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே, வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை, எளிய தமிழில் எடுத்துக் கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு.
எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது, எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். ‘பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும், நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்குமே, நிரந்தரமான வெற்றிக்கும், நீண்டகால நிம்மதிக்கும் வழி வகுக்கும்’.
முகிலை இராச பாண்டியன்