கடந்த, 1996ல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ‘தமிழில் நவீன நாடகம்’ எனும் பெயரில் வெளியிட்டிருந்த நூலில், ‘அரங்க ஆட்டம்: மரபும் நவீன மும்’ எனும் தலைப்பில் நூலாசிரியர் எழுதியிருந்த கட்டுரை இன்று, பெரிய அளவில் வளர்ச்சி பெற்று, தனி நூல் வடிவும் பெற்றுள்ளதே, அவரின் நாடகவியல் அனுபவத்திற்கும், திறனுக்கும் கிடைத்துள்ள வெற்றி என்று கூறலாம்.
இதில் உள்ள பல்வேறு கட்டுரைகள் முழுமை பெறாமல், தேக்கமடைந்துள்ளன. தெருக்கூத்து இன்றும் உள்ளது. நவீன மேடை நாடகங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் பற்றிய குறிப்புகள் அதிகமில்லை. பல தகவல்கள், முழுமையான பொருளடக்கமாக அமையவில்லை. அதிலும் குறிப்பாக, தமிழ் நாடகக்கலை, கவிதை நாடகத்திலிருந்து, இன்றைய நவீன நாடகம் வரை பெற்றுள்ள பரிணாம வளர்ச்சி, சரிவர பதிவு செய்யப்படவில்லை.
இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் பதிவு செய்ய வேண்டியவை உள்ளன. நூலில் தரப்பட்டுள்ள தகவல்களுக்கு ஆதார நூல்கள், அடிக்குறிப்புகளை, நூலாசிரியர் அடுத்த பதிப்பிலாவது, பதிவு செய்ய வேண்டும்.
பின்னலூரான்