ஆன்மிகத்தில் ஆரம்பித்து, பண்டிகை, இயற்கை, உடல் நலம், தமிழ் சமூகம், மாநிலம், நாடு என, பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 103 கட்டுரைகளும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் முன்னுரை, தெளிவுரை, முடிவுரை என்ற பாணியில், பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கும் வகையில் உருவாக்கி உள்ளார்.
தலைப்புகளிலும் பல தகவல்களை திணிக்காமல், மாணவர் என்ன முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டுமோ அவற்றை மட்டும் தொகுத்துள்ளார். தமிழகத்தின் அணைக்கட்டுகள், ஏரிகள் என பல துறைகளில் கட்டுரைகளை தொகுக்க முயற்சித்துள்ளார்.
நுால் ஆரம்பிக்கும் முன், திருமால், அனுமன், கருடன் போற்றிகளும், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவைகளை, 108 என்ற கணக்கில் பட்டியலிட்டுள்ளார். பய பக்தியுடன் படைக்கப்படும் பாடநுால் போல் தோன்றுகிறது.
–
பேரருளாளன்