முருகன் பதிப்பகம், 158, (பண்பகம்) 94 வது தெரு, 15 வது பகுதி, கருணாநிதி நகர், சென்னை-78. (பக்கம்:384)
புள்ளியியல், அறிவியல் என்பது அண்மையில் தோன்றிய ஒன்று. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் புள்ளியியலின் நெறிமுறைகளையும், கொள்கைகளையும் துல்லியமாகப் பின்பற்றி மூன்று பாகங்கள், 14 இயல்கள், 133 அதிகாரங்கள், அதிகாரத்திற்குப் பத்து என்று 1330 குறட் பாக்களை படைத்திருக்கிறார். புள்ளியியலில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள இந்நூலாசிரியர் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக திருக்குறளின் வடிவமைப்பும், படைப்பும் எப்படி புள்ளியியலின் நெறிமுறைகளைப் பின்பற்றி ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை வரைபட விளக்கங்கள் மூலமும் அட்டவணைகள் மூலமும் நிரூபிக்கிறார். இது போன்ற ஒரு நூல் திருக்குறளைப் பற்றி இதுவரை வந்ததில்லை. ஆசிரியரின் இந்த ஆராய்ச்சிப்பணி பெரும் பாராட்டுக்குரியது. தமிழன்பர்களும், திருக்குறளை நேசிப்பவர்களும் அவசியம் படிக்கவேண்டிய நூல்.