இந்திய பிரதமராக பதவி வகித்த ராஜிவ் காந்தியின் வாழ்க்கை நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி, பாரபட்சமின்றி பல்வேறு நுால்கள் துணையுடன் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். புரிந்து கொள்ள ஏற்ற வகையில் கதை போல் எளிமையாக விவரித்து எழுதப்பட்டுள்ளது.
எழுதி முடிக்காத கடிதம் என்ற தலைப்பிலான இயலில் துவங்குகிறது. ராஜிவ் பிறப்பை மிக இயல்பாக விவரிக்கிறது. தொடர்ந்து, காதல் காலம், பைலட் வாழ்க்கை, எமர்ஜென்சி எரிச்சல், சஞ்சயின் மரணம் என தெளிவாக தகவல்களை தொகுத்து தருகிறது.
புத்தகம் ஆறு பாகங்களாக உள்ளது. ஒவ்வொரு பாகத்திலும் உரிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சிரமம் இன்றி வாசிக்க ஏற்ற வகையில், கதை சொல்லல் பாணியில் புத்தகம் விவரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் கொல்லப்பட்ட இயலுடன் முடிகிறது. தொடர்ந்து, இதை எழுத பயன்படுத்திய நுால் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வளர்ச்சி நோக்கி பயணப்பட்ட காலக்கட்டத்தில், முக்கிய தலைவராக மிளிர்ந்தவர் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– ராம்