முகப்பு » ஆன்மிகம் » தெய்வத்தின் குரல் –

தெய்வத்தின் குரல் – ஆங்கிலம்

விலைரூ.0

ஆசிரியர் : ஜெயந்தி ரமேஷ்

வெளியீடு: மஹா பெரியவா கைங்கர்யம் சாரிடபிள் டிரஸ்ட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காஞ்சி மஹா பெரியவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான தெய்வத்தின் குரல் என்ற நுாலிலிருந்து, ஆன்மிகத்தைப் பற்றி அடிப்படை கருத்துக்களை எடுத்துக் கூறும் ஆங்கில நுால். கருத்துக்களை புரிந்து கொள்ள உதவியாக பெரியவர் படங்களுடன், 12 கட்டுரைகள் உள்ளன. மதம் என்றால் என்ன, கடவுள் யார், கடவுளுக்கு ஏன் பல வடிவங்கள் உள்ளன, கோவிலின் அவசியம் என்ன, ஏன் கடவுளுக்கு பலவிதமான உணவு வகைகளைப் படைக்கிறோம், பக்திப் பாடல்கள் பாடுவதால் ஏற்படும் நன்மை என்ன, யாகம் வேள்வி செய்வதால் உண்டாகும் நன்மை என்ன, தேவர்கள் என்பவர்கள் யார் போன்ற கேள்வி தலைப்புகளில் எளிய விளக்கம் தருகிறது.

வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கம், பக்தி, அன்பு, இரக்கம் போன்றவற்றை கற்றுத் தருகிறது. அதற்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், புராணக் கதைகளும் பெரிதும் உதவி செய்கின்றன. ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஓர் ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலின் வடிவாக இறைவன் இருக்கிறான் என்பதை வலியுறுத்துகிறது. சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எளிய ஆங்கில நடையில் அமைந்துள்ள நுால்.
புலவர் நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us