முகப்பு » வாழ்க்கை வரலாறு » சமயம் வளர்த்த

சமயம் வளர்த்த சான்றோர்

விலைரூ.330

ஆசிரியர் : முனைவர் கே.சுந்தரராமன்

வெளியீடு: இந்து தமிழ் திசை

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழும் மகான்கள் பற்றிய விளக்க நுால். மொத்தம், 50 அருளாளர்கள் பற்றிய தகவல்களுடன் மிளிர்கிறது. மகான் ஸ்ரீராகவேந்திரர், மஹா பெரியவர், பகவான் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என துவங்கி, தாயுமானவர், தபோவனம் ஞானாந்தகிரி சுவாமிகள் வரை மகான்களின் வாழ்க்கை பற்றி உரைக்கிறது. அருள் தரும் பெரியவர்களின் வாழ்க்கை சித்திரத்தை மனதில் பதிக்கும் வகையில் உள்ளது.

மகான்கள் பற்றிய தகவல்களுடன், முக்கிய படங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பல முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. பக்தர்களுடன் மஹா பெரியவர் காட்சியளிக்கும் படங்கள் சிறப்பு வாய்ந்தவை. இறைவன் பெருமைகளை எடுத்தியம்ப பூமியில் உதித்த அவதார புருஷர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் வியக்க வைக்கும் வகையில் உள்ளன.

போற்றத்தக்க அனுபவங்களை அறிந்து கொள்ள உதவியாக உள்ளது. பக்தியின் அருமை பெருமைகளும், அதன் மூலம் ஏற்படும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. எளிய வாழ்வு முறையால் இறைவனை உணர்ந்து காட்டிய மகான்கள் பற்றிய சித்திரத்தை மனதில் பதிக்கும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us