வெவ்வேறு பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தனி மனித பிரச்னைகள் மட்டுமல்லாது, சமூகப் பிரச்னைகளையும் முன்னெடுத்துள்ளது. வறுமையிலும் மானமே பெரிதென காமுகனைத் துரத்திய விஜயம்மாவை காட்சிப்படுத்துகிறது, ‘பூ நெஞ்சத் தீ’ என்ற கதை. தரகாக வந்த பணம் முள்ளாகக் குத்தினாலும் கந்துவட்டி மச்சானின் கறார் குணம் ஆறாத வடுவை ஏற்படுத்தியதாக முடிகிறது, ‘நீரில்லா மீன்’ என்ற கதை.
பேருந்து இருக்கையை விட்டுக் கொடுத்தவரின் ஆனந்தமும் நிரல்படுத்தப்பட்டுள்ளது. வர்க்கபேதம் அரங்கேற்றிய கொலை நிகழ்வை விவரிக்கிறது மின்சாரப் பூ. சமூகக் கறையை சலவை செய்யும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்