முகப்பு » கதைகள் » வைதீஸ்வரன் கதைகள்

வைதீஸ்வரன் கதைகள்

விலைரூ.340

ஆசிரியர் : எஸ். வைதீஸ்வரன்

வெளியீடு: எழுத்து பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

மகன், மகள் பேரக் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்க, தனிமையில் வாடும் தாயின் பிறந்த நாள் ஏக்கத்தை, ‘பிம்பம்’ கதை காட்டுகிறது. கார் ஓட்டுனருக்கு சரியான வழிகாட்டிய மாற்றுத்திறனாளியின் கரிசனத்தை, ‘சரியான திருப்பம்’ பகிர்கிறது.

திருமண விருந்து எச்சில் இலைக்கு, நாயும், மனநலம் பாதித்தவரும் பசியுடன் போராடுவதை, ‘பருக்கை’ கதை படம் பிடித்து மனதை நெருட வைக்கிறது.

உடல் பலவீனத்தால் பால் சுரக்காத தாய் குறித்த யதார்த்தத்தை, ‘பால்மணம்’ கூறுகிறது. ஒவ்வொரு கதையும் மனித வாழ்வியலோடு பொருந்துகிறது. எழுத்தில் கவித்துவம் இருப்பது வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us