பிறையை பிரதானப்படுத்தி, சந்திரன் குறித்த விபரங்களை எடுத்துரைக்கும் நுால். இறைவன் வழங்கிய அறிவின் வழியாக சிந்தித்து பெற்ற விபரங்களை தெளிவுபடுத்தி தொகுத்துள்ளது.
சந்திர நாள்காட்டியில் மூன்று நாட்கள் வரை ஆண்டில் வித்தியாசப்படுவதை எடுத்துரைக்கிறது. இவற்றில் தவறவிட்ட தகவல்களை சுட்டிக் காட்டுகிறது. நோன்பு நோற்பதும், பெருநாள் கொண்டாட்டமும் தான் மார்க்கம்; பிறை பார்ப்பதல்ல என்ற கருத்தை முன் வைத்து விளக்கமளிக்கிறது.
பிறை குறித்து குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள விபரங்களையும், நபி மொழியையும், சந்திரன் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் கூறுகிறது. பிறை நாள்காட்டி, கிறிஸ்துவ, யூத நாள்காட்டிகளிலிருந்து வித்தியாசப்படுவதை எளிய நடையில் தெளிவுபடுத்தும் நுால்.
– ஊஞ்சல் பிரபு