தொழில் முனைவோர் எப்படி செயல்பட வேண்டும்; தொடங்கும் முன் செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை சுவைபட விளக்கும் நுால்.
சந்தைத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா... அதற்கான தனித் திறன்கள் உள்ளனவா... இந்தக் கேள்விகளை நடுநிலையோடு கேட்டுக் கொள்ள வேண்டும். சுயமாகத் தொழில் செய்ய விரும்புகிறேன். தரமான பொருளை விற்கிறேன். நுகர்வோரின் வாழ்க்கையில் என் பங்கு முக்கியம் என தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதுவே இலக்காக அமைதல் அவசியம்.
தொழில் முனைவோருக்கு ஏற்பட்ட தோல்விக் கதைகளையும் தெரிந்திருப்பது அவசியம். அது தரும் பாடங்களை உள்வாங்க வேண்டும். புதிதாக தொழில் துவங்க நினைப்போருக்கும் அடியெடுத்து வைத்திருப்போருக்கும் பயன் தரும் புத்தகம்.
– இளங்கோவன்