பெண்கள் உயர்வுக்குக் கல்வியே அச்சாணியாக விளங்குவதை எடுத்து கூறும் நுால். முட்டுக்கட்டைகளை பாதையாக்கி, தடைகளைத் தகர்த்தெறிந்து உலகம் வியக்க வாழும் பெண்களின் பெருமை பேசுகிறது.
தன்னலம் பாராமல் பிறர் நலம் தேடி உழைத்து சுறுசுறுப்பான தேனீயாய் இயங்குவதை விவரிக்கிறது. பொறுப்புடன் செயல்படுவதால் தான் இறைவன் கருவறை தந்தானோ என எண்ணத் தோன்றுவதாக புகழ்கிறது. பாலியல் அத்துமீறல், சீண்டல் போன்ற சிறுமைகள் கண்டு பொங்க கூறுகிறது.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி க்யூரியின் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் விவரிக்கிறது. பெண்களின் உழைப்பு அடுத்த தலைமுறையை காத்து உயர்த்தும் செயலாக அமையும் என்கிறது. பெண்களின் செயல்களை போற்றும் நுால்.
– புலவர் சு.மதியழகன்