நோய்கள் பெருகுவதற்கு உரிய காரணங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் நுால்.
உலகில் மிகச்சிறந்த மருத்துவர் மனம் தான் என்பதை தெளிவாக்கி, அதை செம்மைப்படுத்த தக்க அறிவுரை தருகிறது. சிறிய செய்திகளாக, 56 தலைப்புகளில் உடல் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னைகளை அலசுகிறது. உபாதைகளில் இருந்து விடுபடும் வழிமுறைகளை தருகிறது.
நோய்கள் ஏற்பட்டால் இயற்கையாக குணமாக்கும் நடைமுறையை அறிய வைக்கிறது. அறிகுறி தெரிந்தவுடன் முதலுதவி செய்து கொள்ள உரிய மருத்துவக் குறிப்புகளும், வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. அவரவர் உடல் நலம் அவரவர் கையில் இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்த தொகுப்பு நுால்.
– ராம்