மதுரை ஹார்ட் சென்டர், வானமாமலை நகர் எதிர்புறம், பைபாஸ் ரோடு, மதுரை 16 (பக்கம்: 86)
மருத்துவத்துறையில் 30 ஆண்டு அனுபவமுள்ள, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்கோ, ட்ரெட்மில், ஆஞ்சியோகிராம் செய்த டாக்டர் எழுதியது இந்த நூல். "தாமதமான மாரடைப்பு சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இருதய நோயாளிகளுக்கு இந்த நூலை அர்ப்பணிக்கிறேன்' என்ற நெஞ்சைத்தொடும் வரிகளுடன் துவங்கி புத்தகத்தின் கடைசிப்பக்கம் வரை பல அரிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மாரடைப்பிற்கான காரணங்கள், அறிகுறிகள், முதலுதவி சிகிச்சை போன்றவை எளிய வார்த்தைகளில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. உணவு பழக்கவழக்கங்களுக்கும் மாரடைப்பிற்கும் தொடர்பு உண்டா என்பது போன்ற சந்தேகங்களுக்கு கேள்வி-பதில் பாணியில் டாக்டர் பதிலளித்துள்ளார்.
பைபாஸ் அறுவை சிகிச்சையை விட மருந்துகள் எந்த வகையில் சிறந்தது, மருந்துகளை விட பைபாஸ் அறுவை சிகிச்சை எந்த வகையில் சிறந்தது என்பது எல்லாம் நம் மனதில் எழும் சந்தேகங்கள். இந்த கேள்விகளுக்கு மிக தெளிவாக பதில்களை டாக்டர் விளக்கி உள்ளார். மாரடைப்பை தடுக்கும் வழிகள் வண்ணப்படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. இதய நோயாளிகளின் சந்தேகங்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கிய வாழ்வு வாழ விரும்பும் அத்தனை பேருக்கும் உதவும் அரிய புத்தகம் இது.