உபாசனா பப்ளிகேஷன்ஸ், 6, மன்னார் ரெட்டித் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288)
புற்று நோய் என்பதே புரியாத புதிர் என நம்மவர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நூலின் ஆசிரியர் ஒரு சித்த மருத்துவர். இவருக்கு தமிழில் நன்றாக எழுத வருகிறது. எழுத்தில் எளிமை, விளக்கிச் சொல்லுகையில் தெளிவு. இவரிடம் காணப்படும் இந்த கூடுதல் சிறப்புத் தகுதி வாசகர்களை புற்று நோய் பற்றிய அனைத்து விவரங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிலும் எவ்வகையில் புற்று நோய் வரக்கூடும் என்பதையும், அவற்றிற்கான அறிகுறிகள் எவை என்பதையும் கூறுவதோடு எவ்வாறு இந்த கொடிய நோய் அண்டவிடாமல் தடுப்பது என்பது பற்றியும் ஆசிரியர் மிக நன்றாக விளக்கியிருக்கிறார்.
இந்நோய்களைக் குணப்படுத்தக்கூடிய சில மூலிகைகளின் பெயர்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த மூலிகைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. மூன்று பாகங்களாக அமைந்துள்ள இந்த நூலின் கடைசிப் பகுதி மிகவும் பயனுள்ள பகுதி. தமிழில் சில கலைச்சொற்களையும் (மருத்துவம் தொடர்பான) ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். பாராட்டுக்குரிய முயற்சி.