முகப்பு » இசை » பாமர மக்களின்

பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள்

விலைரூ.100

ஆசிரியர் : அழ.வள்ளியப்பா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 அரிதின் முயன்று கண்டறியப்பட்டுள்ள நாடோடிப் பாடல்களின் தொகுப்பு நுால். தாலாட்டு, மழலையர் பாடல், பக்தி பாடல், உழவர் பாடல், உழைப்பாளர் பாடல் என பல தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

நாடோடிப் பாடலை மென்மையான குழந்தை எனக் கூறலாம். மழலை தன்மையும், மகிழ்ச்சியூட்டும் பாங்கும் நிறைந்து இருக்கிறது. இனிமை, எளிமை, எவரும் பாடக்கூடிய எளிய மெட்டுகளில் அமைந்து இருக்கிறது. ஒரு முறை சொன்னால் போதும், கேட்பவர் மனதில் பாடல் எளிதில் பதிந்து விடும்.

பல பாடல்களில் பொருள் இல்லையெனினும் எதுகை, மோனை ஓசை நயத்துடன் அமைந்திருக்கிறது. தலைமுறையாக வாய்மொழியாக வந்த பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுவர் சிந்தையை ஈர்க்கும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us