காற்றில் ஏற்படும் மாசுகளின் விளைவை பற்றி உரைக்கும் நுால்.
காற்று, புயல், வளிமண்டல இயக்கம், ஆதாரங்களும் ஆபத்துகளும், ஒகி புயல், தானே புயல், இந்திய விண்வெளிக் குப்பை, இயற்கைப் பேரிடர் என, 44 தலைப்புகளில் தகவல்கள் தருகிறது. காற்று இல்லை என்றாலும், அளவுக்கு அதிகமாக வீசினாலும் உயிரினங்களை பாதிக்கும் என்பதை எடுத்துரைக்கிறது. சுழற்காற்றின் வினோதம் பற்றி குறிப்பிடுகிறது.
புயல் கடலில் உருவாவதை தெளிவாக விவரிக்கிறது. இயற்கை வளங்களை பாதுகாத்தால், காற்று மாசுபடுவதை தடுக்கலாம் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. உயிர் வாழ்வதற்கு, ஆக்சிஜன் என்ற உயிர் காற்று முக்கியமானது என உணர்த்தி, அதை பாதுகாக்கும் வழிமுறைகளையும் எடுத்து கூறும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்