உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
கனவின் மர்மவெளிகளாலும், பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப்பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச் சென்றவண்ணமிருக்கின்றன. அனுபவத்தின் மிக சூட்சுமமான முடிச்சுகளை அவிழ்த்தபடி காலத்தின், சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில் இக்கதைகள் சஞ்சரிக்க முயல்கின்றன. பாசாங்கற்ற, புத்தம் புதிய கதைமொழியொன்றை இக்கதைகள் உருவாக்க விழைகின்றன.