சித்தாலப்பாக்கம் அருகே அரசன்கழனி கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் குறித்து விளக்கும் நுால்.
முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு தெப்பம், பிரதோஷம், கிரிவலம் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருவதை எடுத்து கூறுகிறது. கட்டுமானத்தில் 16 துாண்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது.
மூன்றாம் குலோத்துங்க மன்னன் பரம்பரையில் ஆண்ட குறுநில மன்னன், இக்கிராமத்தை தானமாக தந்த வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கிறது. பெரியாண்டவரை குல தெய்வமாக உடையோர் பிரார்த்தனை செய்வதாக உரைக்கிறது. பசுபதீஸ்வரர் கோவில் சிறப்புகளை எடுத்து கூறும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து