ஒரு நுாற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால்.
மனைவி, மகள்களுடன் புனித யாத்திரை செல்கிறார் சோழ மன்னன் விக்கிரம சோழன். வழியில் மகிஷாசப்புர நாட்டு ராஜகுமாரனுடன் சந்திப்பு நடக்கிறது.
அவனுக்கு, விக்கிரம சோழனின் கடைசி மகள் அமராவதி மீது காதல் உண்டாகிறது. தொடர்ந்து சூழ்ச்சி, பொறாமை, பிற நாடுகளில் தஞ்சம் என நகர்கிறது.
இதில், இளவரசி அதிசய சிந்தாமணி என்ற கதாபாத்திரம் வித்தியாசமாக உள்ளது. கேள்விக்கு பதில் சொல்லாத மன்னர்களின் தலையை வாங்குவதாக வித்தியாசமான முடிவை சொல்கிறது. வியக்கவும், மலைக்கவும் வைக்கும் நாவல்.
– புலவர் சு.மதியழகன்