தனித்துவமான வாழ்வியல் மணம் பரப்பும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வு நெறி, தனிமனித பண்பாடு, சமுதாய மேம்பாட்டை முன்னெடுத்து, கற்பனையை குழைத்து கதைகள் பின்னப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இன்றைய உலகில் பயணிக்கும் அனுபவத்தை தருகின்றன.
உடல் ஈர்ப்பால் மலர்ந்த காதலை புரிய வைக்கும் ‘செங்கமலக் கிழவி’ கதை, பண்பட்ட நிலையை விவரிக்கிறது. இனம் காண இயலாத வக்கிர மனம் கொண்ட தாரகாசுரனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ‘தாருக வதம்’ கதை. இயற்கை நாட்டம், காதல் உணர்வு, பறவை ஆர்வம், கணினி யுகம் என தளங்களை காட்டும் நுால்.
– ஊஞ்சல் பிரபு