கொலை, தீய செயல்களுக்கு பணத்தாசையும், உடற்பசியுமே காரணம் என்பதை உளவியல் சிந்தனையோடு விளக்கும் பொழுதுபோக்கு நாவல் நுால்.
கதாநாயகி வித்யாவின் தந்தை மலேஷியாவில் தொழில் செய்தவர்; அகலக்கால் வைத்து நஷ்டமடைந்தவர். மாமியாரின் சொத்துக்கு ஆசைப்பட்டு நெருக்கடிகள் கொடுத்தவர். இதனால், மகள் வித்யாவுக்கு சொத்துக்களை எழுதி வைத்துவிட்டார் மாமியார்.
வித்யாவின் சகோதரன் பிரபு, உரிய வேலை இன்றி தீயவழியில் ஈடுபட்டு தங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறான். வித்யாவிற்கு மணம் முடிக்க ஏற்பாடு நடந்தபோது, சாலை விபத்தில் காயமடைந்து நினைவிழக்கிறாள். தொடர்ந்து அரங்கேறும் கொடூரங்களுக்கு விடை தேடும் வகையில் உள்ள நாவல்.
– புலவர் சு.மதியழகன்