தீவிரவாத இயக்கப் பின்னணியில் மலர்ந்த காதலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
கந்து வட்டி கொடுமைக்கு எதிராக கிராம மக்களை எழுச்சி பெற வைக்கிறான், ஒரு இளைஞன். வட்டி கொடுமையால் தற்கொலை செய்த விவசாயி மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கிறான்; அவள் வழியாக வளர்க்க முயல்கிறான். அப்போது ஏற்படும் காதலை மையப்படுத்தி படைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாடு அணுகுமுறையுள்ள இளைஞன், போலீசாரின் அடக்கு முறைகளை கடுமையாக எதிர்கொள்கிறான். தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகள், கதை நிகழ்வுகளின் ஊடே தெளிவாக காட்டப்பட்டு உள்ளன. வித்தியாசமான கோணத்தில் அமைந்து, யதார்த்த நிலையை சித்தரிக்கும் நாவல் நுால்.
– ராம்