இயல், இசை, நாடக தமிழால் முருகன் போற்றப்படுவதை விளக்கும் நுால்.
திருமுருகாற்றுப்படை, பரிபாடல், இறையனார் களவியல் உரையில் முருகனைப் போற்றும் பகுதிகள் தொகுத்து தரப்பட்டுள்ளது.
சங்கத்தலைவன் கந்தன், குறிஞ்சிக் கடவுள் குமரன் என்ற அடைமொழியுடன் புகழ்பாடுகிறது. திருப்புகழ், கந்தர் கலிவெண்பா பாடல் அடிகளை முறையாக எடுத்துரைக்கிறது. கந்தனுக்குக் காவடி எடுக்கும் வழக்கத்தை இலக்கிய ஆய்வு நோக்கில் எடுத்துரைத்துள்ளது.
பேய்க்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. திருமந்திரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை எல்லாப் பகுதிகளிலும் காணமுடிகிறது. முருகன் புகழ் உலகெல்லாம் பரவி நிற்பதை எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்