நெருங்கிய நண்பர்கள் இணைந்த, துப்பறியும் களங்களை உடைய கதைகளின் தொகுப்பு நுால்.
துப்பறியும் கதைகளுக்கே உரிய சந்தேகங்கள், தீர்வுகள், மதியூகம், திட்டம் தீட்டுதல் என அனைத்தும் விரவியுள்ளன. திருட்டு, மோசடி, குழந்தை கடத்தல், மிரட்டல் என பல தளங்களையும் காண முடிகிறது. இடையிடையே குடும்ப உரையாடல் களங்கள் இடம் பெறுகின்றன.
உள்ளடக்கம் மூன்று பகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளது. இளம் வயது நண்பர்கள் துப்பறியும் வெவ்வேறு களங்களை உள்ளடக்கிய கதைகள் பின்னப்பட்டுள்ளன. திட்டமிட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் குட்டிக்கதைகளும் உள்ளன. ஒவ்வொரு கதை முடிவிலும் மற்றொன்று துவங்குவதாக அமைந்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு