ஸ்ரீகிருஷ்ண கான சபா, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை-17. அச்சிட்டோர்: முத்ரா பிரிண்ட்ஸ், சென்னை-34. (பக்கம்: 200. விலை: குறிப்பிடப்படவில்லை)
லால்குடியின் 80வது வயது பூர்த்தி அடைந்ததையும், அவரது இசைப் பயணத்தையும் இணைத்து, ஸ்ரீ கிருஷ்ண கான சபாவால் வெளியிடப்பட்ட நூல். முதல் 13 மூன்று பக்கங்கள் மிக அரிய புகைப்படங்களைக் கொண்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல நாளேடுகள், பத்திரிகைகள் அவரைப் பேட்டி கண்டதை தொகுத்தளித்துள்ளார். அதில், அவர் தந்திருக்கும் விளக்கங்கள் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தும் .வயலின் எனும் வாத்தியத்தைப் பற்றி, ஒரு முழு திரட்டாகவும் உள்ளதால் புத்தகம் படிக்கும்போது, ஒரு மன நிறைவு கிடைத்துவிடுகிறது . அவரதுபாணி, அரங்கிசை உருப்படிகளின் மீது அவர் கையாண்ட விதம், அவர் இயற்றிய இசை வகுப்புகளின் விளக்கங்கள் என்று அனைத்தையும் திரட்டிக் கொடுத்துள்ளனர். மேலும் குரலிசை, கருவி இசை, நாட்டிய மேதைகள் என இசையின் அனைத்து தரப்பினரும் கட்டுரைகளாக அவரது திறமையை வெளிப்படுத்தி எழுதியுள்ளனர். அவர் அளித்த பேட்டி இசையின் மேல் அவருக்கு இருந்த தணியாத தாகம், ஈடுபாடு, எல்லாவற்றையும் ஒரு சேர தெரிந்து கொள்ள இப்புத்தகம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. புத்தகத்தின் பின் 23 பக்கங்களில் அவர் பக்கவாத்தியமாக வாசித்த பல ஜாம்பவான்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது அருமை.