முகப்பு » வாழ்க்கை வரலாறு » நல்லறம் வளர்த்த

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

விலைரூ.150

ஆசிரியர் : எஸ்.பரதன்

வெளியீடு: மருதேவி பரதன் அறக்கட்டளை

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 184    

வள்ளல் பச்சையப்பர் தான் வாழ்ந்த மிகக்குறுகிய, 40ஆண்டுக்காலத்தில் மிகப்பயனுள்ள வாழ்வாக வாழ்ந்தவர். அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள், கட்டிய கோவில்கள், எழுப்பிய கோபுரங்கள், நிறுவிய அறக்கட்டளைகள் நூற்றுக்கணக்கில் தமிழகம் எங்கும் விரவிக்கிடக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டபோது, துபாஷ் அல்லது துவிபாஷி  ஆகிய இருமொழி மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஒரு நபரால், தம் வாழ்க்கை வருவாய் (இன்றைய மதிப்பில் அவரின் சொத்து மதிப்பு அறுபதினாயிரம் கோடி ரூபாய்) முழுவதையுமே அறப்பணிகளுக்காக் செலவிட முடியுமா என்றால், முடியும் என்பதற்கு ஒரே உதாரணமாக இருப்பவர் வள்ளல் பச்சையப்பர்.

ஆசிரியர் பல்வேறு தகவல்களைத் தக்க ஆவணங்களைத் திரட்டி, எழுதியிருப்பதோடு பச்சையப்பர் திருப்பணி செய்த கோவில்களின், தல வரலாறுகளையும தகுந்த புகைப்படங்களுடன் இணைத்துத் தந்திருக்கிறார் .

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us