‘என்பீல்ட்’ மோட்டார் பைக்கில் அட்டகாசமாக வரும் ஒருத்தி, அயராமல் பொய் சொல்லும் கணவனை விட்டுக்கொடுக்காத ஒருத்தி, கணவன் ஓரிடம், தான் ஓரிடம் என நாட்டியமாடும் இன்னொருத்தி, வட்டிக்கு பணம் கொடுத்து வாழ்வின் சவால்களைச் சந்திக்கும் வேறொருத்தி என, பெண்கள் சூழ் உலகாக நகர்கிறது இந்நாவல். இதற்கிடையில் வங்கிக்கு சரியாக வராத மணிகர்ணிகாவின் காதல் கதை என்ன ஆனது என்பதே நாவல்.