மீனவர்கள் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடல், கரை என களத்தில் இறங்கி மீனவர்கள் வாழ்வை பேசுகிறது. கடலில் கலக்கும் கழிவால் ஏற்படும் தீங்குகளை அலசுகிறது. மீன்கள் உணவுக்கு உகந்ததில்லை என்பதன் அறியாமையை சொல்கிறது. உயிர் வாழ உணவு தேடி உழைத்த காலம் மாறி, செல்வம் பெருக்கும் கடலாக மாறியதை கூறுகிறது. புயலின் பாதிப்பை கூறும், ‘ஜெபமாலை’ கதை மனதை கரைய வைக்கிறது.
மீன்கள் கொத்தி தின்ற கணவரின் உடலின் மிச்சத்தை, மனைவி அடையாளம் காட்டும் மரண வலியை அலசுகிறது. குமரி மாவட்ட மீனவர் வாழ்வை அலசும் நுால்.
–
டி.எஸ்.ராயன்