உயிர்மை பதிப்பகம், சென்னை-18. தொலைபேசி எண். 044-2499 3448. (பக்கம்: 112).
அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர், தம் இளம் பிராயத்தில் சந்தித்த, ரசித்த தெளிவுபெற நினைத்த பல விஷயங்களை 29 கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார்.மவுன்ட்பேட்டன் சரியாக இரவு 11.58 மணிக்கு 14.08.1947 அன்று வெகு நாட்களாக நிலுவையில் வைத்திருந்த பாலன்பூர் நவாப் குறித்த மனுவை அனுமதித்துக் கையொப்பம் இட்டது (பக்.35) மிகவும் ரசிக்கத் தக்கதாக உள்ளது.அப்பா வக்கீலாக இருந்ததால் கிடைத்த மரியாதை (பக். 23), அக்பர் கங்கா ஜலம் மட்டுமே பருகி வந்தது (பக். 26), குடும்பத் தலைவனின் குறிப்புகள் (பக்.102) ஆகியவை வாசகர்களை வசீகரிக்கும்.