பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104.)
மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமயத் தொண்டு புரியப் போந்தார். அத்தொண்டு சிறக்கும் வண் ணம் தமிழ்மொழி பயின்றபோது அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது.
தொன்மொழியாய தமிழோடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை ஒத்து நோக்கி திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். ரா.பி.சேதுப்பிள்ளை கால்டுவெல் ஐயரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளையும் அவரது சாதனைகளையும் விரிவாக இதில் எடுத்துக் கூறியுள்ளார்.
திருநெல்வேலி சரித்திரத்தை முறையாக எழுதி தமிழ் தொண்டாற்றியவருடைய வாழ்க்கைக் கதை இது.