தெரேசா பப்ளிகேஷன்ஸ், ஏ-3, ஒலிவியா, 34, ராமப்ப நகர் மெயின் ரோடு, பெருங்குடி, சென்னை-96.
தனது இரு நாவல்களை துணிச்சலாக தன் செலவிலேயே வெளியிட்டுள்ள ஆசிரியரின் தைரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.தாலி கட்டப்படாத மனைவி - இரட்டையராகப் பிறந்த சகோதரிகளின் வாழ்க்கையை திரைப்படம் போல் எடுத்துச் சென்றிருக்கிறார். படிக்கும்போதே காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன. ராமுவை ஏகபத்தினி விரதனாகக் காட்டுவதற்காக ஜானகியை சாகடித்து கதையை முடித்து விட்டார்.நாவல் பிரியர்களுக்கு இரட்டை நாவல் விருந்து. படித்தால் நிச்சயம் பாராட்டுவீர்கள்.