குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17 (பக்கம்: 112)
தந்தை பெரியாரையும், அவரது சேவைகளைப் பற்றியும் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டு இருந்தாலும், இந்நூலை கவிஞர் நா.காமராசன் தனக்கேயுரிய கவிதை நடையில் எழுதியுள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வரிகளில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரியாரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள், அவரது போராட்டங்கள், அவர் பெற்ற வெற்றிகள், அவரின் சிந்தனைகள், எழுச்சி ஆகியவை அழகு தமிழில் விவரிக்கப்பட்டுள்ளன.
பகுத்தறிவு ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.