ஒழுக்க நெறிக் கோட்பாடுகள், சுயநலம், நீதி நெறி போன்றவை மனித இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்பதை சிறு சிறு தலைப்புகளில் ஆய்ந்தளிக்கும் நுால்.
மது, மாமிசம், ஆபாசங்களைப் பார்த்தல், கேட்டல், நாடகம் மற்றும் திரைப்படம் மனிதனின் காமத்தைத் துாண்டி, நரகம் என்னும் தீய வழிக்குக் கொண்டு செல்லும் என போதிக்கிறது. திரைப்படம் இந்நாட்டில் ஒரு சாபக்கேடாக ஆகிவிட்டது. அனைவரும் ஏதேனும் ஒரு பொழுதுபோக்கில் நேரத்தையும், பணத்தையும் செலவிடுவது தீய பழக்கம் என்கிறது.
சுய ஆய்வு, கட்டுப்பாடு, மறுப்பு, ஒழுக்கம், முன்னேற்றம், சார்பு, மவுனம், எளிமை, வாய்மை போன்றவை நல்ல பண்புகள் என்றும், அகங்காரம், பேராசை, லஞ்ச ஊழல், கோழைத்தனம், தீயோர் இணக்கம், சூது, மது, மாது போன்றவை தீய குணங்களின் அடிப்படை என்றும் பதிவு செய்துள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்