கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17. (பக்கம்: 144)
நாவுக்கரசரின் வரலாறு. அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அவருடைய சமயக் கோட்பாடுகள் பற்றியும் ஆசிரியர் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ள புத்தகம் இது. சமயக் குரவர்களுள் நாவுக்கரசர் மிகவும் முக்கியமானவர். நாவுக்கரசரின் புகழ் குறித்துப் பேசும் இந்த புத்தகம், அவருடைய நினைவைப் போற்றியவர்களைப் பற்றியும் பேசுகிறது. சைவத்தின் மாண்பை விளக்கும் நூல்.