ஜீ.ஏ., அறக்கட்டளை, சென்னை-28. (பக்கம்: 222).
தென்னாங்கூரில் நடைபெற்ற, ஸ்ரீ வைகாநஸ பகவத் சாஸ்த்ரம் மற்றும் சிவாகம் வித்வத் சதசில் சாற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
ஸ்ரீ பாண்டுரங்கனின் பள்ளி எழுச்சி, அஷ்டகம், குரு பரம்பரை சுலோகங்கள், ஷ்ரீமத் விகனஸோத் பத்தி சரிதம் - படைப்பு, - பதிற்றுப் பத்தந்தாதி , வாழிதிருநாமம், நித்யார்ச்சனம், மஹோத்சவம், புஷ்பயாகம், மகா சந்நதி யக்ஞம் என்று வைகாநஸ பட்டாச்சார்யருக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் தரப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளில் மணிப்பிரவாள நடை.
அர்ச்சகர், ஜபம், பூஜை சம்பந்தமான கேள்விப் பதில் பகுதி, ஸ்ரீ வைகாநஸமும் ஆழ்வார்களும் என்ற பகுதிகள், ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.