விஜயா பதிப்பகம், 20 ராஜவீதி, கோயமுத்தூர் - 641 001. (பக்கம்:144)
நம் ஆன்மா கடைத்தேற வேண்டுமானால், வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் குருவருள் இன்றியமையாதது. திருமூலர் மற்றும் வள்ளலாரைத்
தொடர்ந்து இன்று நமக்குக் கிடைத்த ஒரு ஞான இலக்கியமே வேதாத்திரிய இலக்கியம் (பக்.29) என்று தன்னுடைய குருவான வேதாத்திரிய
மகரிஷியின் பெருமைகளை கூறி, ஒருவரின் துக்கத்தையும் துயரத்தையும் நீக்குவது குருவருள் மட்டுமே என்று விளக்கியுள்ளார் ஆசிரியர்.இந்நூல்,
குருவினால் எதுவும் செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது.