டெய்சி - டேரின் பப்ளிஷிங் ஹவுஸ். "ஹிம் ஹோம்' 3/1, அன்பு நகர், மானாமதுரை 630 606. சிவகங்கை மாவட்டம். பக்கம் 200
காற்று மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு குறித்து, மிக விரிவாக வெளிவந்த முதல் தமிழ் நூல் இதுவே. இந்நூலில், காற்றுமாசுபாடு, காற்று மாசுக்களின் மூலங்கள், காற்று மாசுக்களின் வகைகள், காற்று மண்டல வினைகள், காற்று மாசுக்களின் விளைவுகள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகிய ஏழு தலைப்புகளில் காற்று மாசுபாட்டின் தொடக்கம் முதல் அதன் இறுதிக்கட்டமாக இருக்க வேண்டிய கட்டுப்பாடு வரையிலான தகவல்கள் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
இத்தகவல்கள் எளிமையான, தெளிவான மற்றும் சிறப்பான நடையில் விளக்கமாக அமைந்துள்ளன. புதிய கலைச் சொற்களும் உருவாக்கப்பட்டு கையாளப் பட்டுள்ளன. காற்றைப் பாதுகாப்பதற்காக அன்றாட வாழ்வில், நாம் செய்ய வேண்டிய கடமைகளாக ஏழு அத்தியாயங்களின் இறுதியில் ரத்தின சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகம் தமிழில் நல்ல முயற்சி என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியுள்ளார். பொதுமக்களிடையே காற்று சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய முயற்சி இது.