முகப்பு » பொது » அரசாங்கம் பற்றிய

அரசாங்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை

விலைரூ.100

ஆசிரியர் : என்.கே.எஸ்.ருக்மாங்கதன்

வெளியீடு: பினீக்ஸ் பப்ளிகேஷன்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
அரசாங்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை: எழுதியவர்: என்.கே.எஸ்.ருக்மாங்கதன், பினீக்ஸ் பப்ளிகேஷன், சென்னை - 49. (பக்கம்: 234, விலை: ரூ.100)

ஐரோப்பிய நாடுகளில் 17ம் நூற்றாண்டில் பகுத்தறிவுக்கு வித்திட்ட தத்துவஞானி ஜான் லாக். இவர் அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு மூலாதாரமாக திகழ்ந்தவர் என்றாலும், மேற்கத்திய மக்களின் சிந்தனையை தூண்டும், அரசியல், பொருளாதார தத்துவ நூல்களை எழுதியவர். அவர் நூல்களில் ஒன்று தான் அரசாங்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை என்பது. இதைத் தான் ருக்மாங்கதன் மொழிமாற்றம் செய்துள்ளார். மன்னர்களின் தெய்வீக உரிமை கோட்பாட்டை எதிர்க்கும் லாக், மக்களுக்கு அரசு மீது உள்ள உரிமையும், சுதந்திரமும், மக்களால் விருப்பத்தின் பேரிலேயே ஆட்சி அமைய வேண்டும் என்ற குடியாட்சி தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இதை தமிழில் மொழி

பெயர்ப்பதில் ஆசிரியருக்கு மிகுந்த சிரமம் இருந்திருக்கிறது என்பதை உணருகிறோம். ஆனால் அதை எல்லாருக்கும் புரியவைக்க முயன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார். மக்களின் தனி உரிமை, அதிகார பகிர்ந்தளிப்பு, சொத்துரிமை என்று லாக் சொன்னதை படிக்கும்போது பகுத்தறிவுக்கு எந்த அளவு பிரிட்டனிலும், பிரான்சிலும் அதற்கான அடிப்படைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே விதைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
வித்தியாசமான கருத்துக்கள் கொண்ட அரசியல் ஆய்வுக் கட்டுரை இது. ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுதல்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us