இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவாக மாற்றமடைகின்றன என்ற கேள்வி இலக்கியத்திற்கான கேள்வி மட்டுமல்ல - இன்றைய தமிழ் வாழ்க்கைக்குமான கேள்வியாகும்.