ஜகன்மாதா அவள்!
உலகின் சகல ஜிவராசிகளுக்கும் தாயாக விளங்குபவள்! அள்ள அள்ளக் குறையாத அன்பை நமக்கெல்லாம் வாரிவழங்கி,வளமும் நிலமும் தந்து வாழ வைப்பவள்.எப்போதும் நமக்கு ஆனந்தத்தை அளிப்பவள்.
வாழ்வில் அமுதமாக நிறைந்திருப்பவள்.ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு,காற்று என்ற ஐம்பெரும் வடிவமாகத் திகழ்பவள். அனைத்துக்கும் தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பவள்.
தன்னை நம்பும் பக்தர்கள், துன்பங்களில் சிக்குண்டு திக்குதிசை தெரியாமல் தவிக்கும்போதெல்லாம் அரவணைத்துக் காப்பவள்.பாதை தவறிச் செல்லும்போது, ஒளிவிளக்காகத் திகழ்ந்து வழிநடத்துபவளும் அவள்தான்!
மனிதர்களது வாழ்வில் மட்டுமல்ல...தேவர்கள், அசுரர்கள், தெய்வங்கள் முதலானவர்களிடமும் அம்பிகை அருள்பாலித்து நடத்திய திருவிளையாடல்கள் அநேகம்.படிக்கப் படிக்க பரவசமூட்டும் இந்தக் கதைகள், நம்மை மெய்மறக்கச் செய்வது நிச்சயம்!