'திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேருமடா; உந்தன் வாழ்வில் விருப்பம் கூடுமடா!' இந்த நம்பிக்கையை நெஞ்சில் சுமந்தபடி கோடானுகோடி கூட்டம் அந்த 'க்யூ'வில் நிற்கிறது. விநாடி நேர தரிசனம், மின்னலாக ஓர் அருள் கீற்று, தேன்துளியாய் ஒரு பரவசம்... ருசித்துவிட்டு, மலையிலிருந்து இறங்குகிறோம். முழு சார்ஜ் ஆன செல்ஃபோன் போல, சர்வீஸுக்குப் போய்வந்த கார் போல, மனித இயந்திரம் புத்துணர்ச்சி பெற்றுவிடுவது அனுபவ உண்மையல்லவா! பாலாஜியின் சாம்ராஜ்யத்தைச் சுற்றி தெய்வீக வலம் வருகிறது இந்நூல். நூலாசிரியர் சந்திரசேகர சர்மா 'பெரிய கடவுள்' என்று ஏற்கெனவே விநாயகபுராணம் படைத்தவர்.