மார்கழி மாதம். எங்கும் குளிர் பனி. பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம். இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள், வேத சாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காண முடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். "பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது.