குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96).
"ஜனசக்தி' பத்திரிகையில் 68-69களில் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை இன்றைய காலக்கட்டத்திற்கு கடுகளவும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள பல விஷயங்களும் நமுத்துப் போனவை. அன்றைய தொழிற்சங்கம், அன்றைய தி.மு.க., அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் என்பதெல்லாம் இன்றைய நிலையில் நினைவு கூறும் வகையாகத் தெரியவில்லை.தா.பாண்டியன் நல்ல எழுத்தாளர், சித்தாந்தவாதி. தனி படைப்பில் இன்னொரு புத்தகமும் கணக்கில் சேர வேண்டும் ஏன் தான் ஆசைப்பட்டாரோ?