கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712
சாதனைக்கு வயதில்லை... வடலூர் வள்ளலார் இராமலிங்கர், பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிரியர் வகுப்புக்கு வந்தவுடன் மாணவர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற பாடலைப் பாடினர். இராமலிங்கர், அந்தப் பாடல் வேண்டாம் என்று எதிர்மறையான செயலைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே அதைப் பாட முடியாது என்று மறுத்துவிட்டார். ஆசிரியருக்கு இதனால் கடும் கோபம்; அப்படியானால் வேண்டும் என்று முடிகிற மாதிரி நீயே பாடு என்று வள்ளலார் பணிக்கப்பட்டார். வள்ளலார் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று கம்பீரமாகப் பாடினார். இதைக் கேட்டு அனைவரும் வாயடைத்து நின்றனர். அந்தப் பாடலைப் பாடும்போது வள்ளலாருக்கு வயது ஐந்து.