திருக்குடந்தைப் பதிப்பகம், எண்.161/1, வி.எம்.தெரு, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 102) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, எழுத்தாளர் சுந்தர ராமசாமி, ஓவியர் ஆதிமூலம், டைரக்டர் ஸ்ரீதர், தமிழ்ஞானி அ.ச.ஞானசம்பந்தன், தாளமுத்து நடராஜன், நடிகர்கள் எம்.என்.நம்பியார், சந்திரபாபு, நாகேஷ் இவ்விதமாகப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் 35 பேர் பற்றிய தகவல்கள் ஓரிரு பக்கங்களில் சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளன. விலையைக் கணிசமாகக் குறைத்திருந்தால் அதிகபட்ச வாசகர்கள் வாங்க இயலும்.