ஈஸ்வரகம், 391, இந்திரா காந்தி தெரு, ஆழ்வார் நகர், நாகமலை, மதுரை- 625 019 (பக்கம்:192)
இந்தியாவில் நிலவி வரும் தத்துவப் பிரிவுகளுள் சைவ சித்தாந்தமும் ஒன்று. திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தோத்திரங்களும், மெய்கண்ட சிவம் முதலிய ஐவர் அருளிய 14 சித்தாந்த சாத்திரங்களும் சைவத்தின் இருகண்களாக விளங்கி வருகின்றன. இந்நூல், தோத்திர சாத்திரங்களில் பொதிந்துள்ள சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிமையாகத் தெளிவாக எடுத்து விளக்குகிறது. நூலாசிரியர், மொத்தம் 17 தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். "சித்தாந்த நூல்களில் திருக்குறள் சிந்தனை என்ற கட்டுரையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.