கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை-18. (பக்கம்: 206)
நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத் தக்க மாற்றம் இது. சில காலம் முன் வரை கூட ஒரு சேரியாக மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த அன்னை சத்தியா நகர், இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் பவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசு, முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன்னார்வத் தொண்டர்கள், பணியா ளர்கள், மாணவர்கள், வெவ்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருமித்து, கரம் கோர்த்து, இந்த லட்சியக் கனவை நிøவேற்றியிருக்கின்றனர். தடைகளை அகற்றி, ஒரு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான உத்வேகத்தை இந்தப் புத்தகம் அளிக்கிறது.