விலைரூ.90
புத்தகங்கள்
Rating
திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை-20. (பக்கம்: 280)
கால் நூற்றாண்டிற்கும் மேலாய் ஜோதிடக் கலையில் ஆய்வுப் புலமையும், பயிற்சியும் பெற்றவர் நூலாசிரியர் பராசரம் பாலசுப்பிரமணியம். ஜோதிடம் ஒரு சிறந்த விஞ்ஞானம் எனத் துவங்கி பிரார்த்தனைத் தலங்கள் என 15 தலைப்புகளில் இந்நூலைப் படைத்துள்ளார். ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும், என்ற கேள்விக்கு ஒரு அத்தியாயத்தை எளிமையாகவும் எல்லாருக்கும் புரியும் வண்ணம் தந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, சூரியனிலிருந்து கேது முடிய உள்ள ஒன்பது கிரகங்களின் சஞ்சாரங்கள், தோஷங்கள், பரிகாரங்கள், துதிப்பாடல்கள், சூத்திரங்கள், வழிபாடுகள் என மிகத் தெளிவாய்த் தந்துள்ளார்.
பிரார்த்தனைத் தலங்கள் என்ற அத்தியாயத்தில் நீண்ட ஆயுளைப் பெற திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம், திருப்பைஞ்ஞீலி, கருவேலி, தொழுநோய் தீர சங்கரநாராயணார் திருக்கோவில், மனநோய் அகல சோளிங்கர், ரத்த அழுத்தம், கேன்சர் நோய் தீர கேரளாவின் வடக்கன்சேரியில் உள்ள நெல்வாயிலில் உள்ள தன்வந்திரி கோவில் எனப் பல திருத்தலங்களைப் பரிகார பூஜைக்குரியதாய்ப் பதிவு செய்துள்ளார். "நாளும் கோளும் நல்லனவே செய்யும் என்பார் திருஞானசம்பந்தர். நலம் தரும் நவக்கிரகங்களைப் பற்றி அரிய செய்திகள் உள்ளடக்கியது இந்நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!